Sinthanai Sei Maname!!
- வேலை செய்வதே கடினம். ஆனால் எந்த வேலையும் கடினம் அல்ல.
- பதவி மனிதனுக்கு கௌரவம் கொடுப்பது அல்ல. மனிதன் தான் பதவிக்கு கௌரவம் கொடுக்கிறான்.
- சிந்தனை இல்லாத கல்வி பயனற்றது. கல்வி இல்லாத சிந்தனை ஆபத்தானது.
- இன்பங்கள் ஆழமற்றவை. துன்பங்கள் ஆழமானவை.
- வெற்றியில் கற்பது சொற்பமே. தோல்வியில் கற்பதே அதிகம்.
- இனிமையாக இருக்காதே. விழுங்கபடுவாய்.
- கசப்பாக இருக்காதே, துன்பப்படுவாய்.
- உடல் மெலியலாம். உள்ளம் மெலிய விடாதே.
- முட்டாள் சம்பாதிக்கலாம். ஆனால் புத்திசாலி தான் அதை காப்பாற்ற இயலும்.
- பைசாவை நீ கவனித்தால், போதும். பணம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.
- எவரையும் அடக்கி ஆளாதவன், எவராலும் அடக்கி ஆளப்பட மாட்டான்.
- செயலற்ற சிந்தனை கயமை. சிந்தனையற்ற செயல் மடமை.